Tuesday, 24 June 2008

கடிதம்

என்னதான், தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டு, தமிழில் அச்சு செய்து, வலைப்பதிவில் பதிவு செய்து வந்தாலும், பேனாவில் மசி ஊற்றி, விரலிடுக்கில் மசி கசிய, அதை பிடிக்கத் தெரியாமல் பிடித்து, அக்காகளிடமும, தங்கச்சியிடமும், பேனா சண்டை போட்டு, அன்புடைய... என்று ஆரம்பித்து, இரண்டு வரிகளில் கடிதம் எழுதியமுதல் பதிவை மறக்கவே முடியாது. அந்த இன்பமும், வேறு எதிலும் கிடைக்காது. இன்றுள்ள செல் பேசிகளுக்குமுந்தைய தொலைபேசிகளுக்கு முன்னால், கடிதங்களுக்காக காத்திருப்பது ஒரு பரவச அனுபவம். அதுவும், கல்லூரி நாட்களில், விடுதி வாசம் செய்தவர்களுக்கு தெரியும் அதன் அருமை. எங்கள் விடுதியில், யாருக்கு அதிககடிதங்கள் வருதுன்னு ஒரு போட்டியே நடக்கும். விடுதிக்கு வரும் கடிதங்கள் எல்லாம் வரவேற்பரையில் ஓரு table-லவச்சிருப்பாங்க. அவங்க அவங்க அவங்களுடைய கடிதங்களை எடுத்துக்கலாம். மதியம் 2;30 மேல தான் தபால்காரர்வருவார். வேலை நாட்களில் மாலையில், விடுதிக்குள் நுழையும்போதே நமக்கு கடிதம் வந்திருக்கிறதா என்ற கேள்வியுடன்தான் வருவோம். ஆனால், சனிக்கிழமை மற்றும் விடுதியில் இருக்கும் நாட்களில் எப்படா தபால்காரர் வருவார் என்றுதவமிருப்போம். அந்த கடிதங்களிலும், அனுப்புநர் யார் என்று நமக்கு முன் நம்ம friends-லாம் பார்த்து, ஏ.... உனக்குஉங்கம்மாகிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு... அப்படின்னு கத்திட்டே வந்து நம்மகிட்ட குடுக்கும்போது... ஆஹா...ஏதோ நம்ம அம்மாவையே நேர பாத்துட்ட மாதிரி ஒரு சிலிர்ப்பு...! ( இதில் காதல் கடிதங்களுக்கும் பஞ்சமிருக்காது)யார்க்கு நிறைய லெட்டர்ஸ் வருதுன்னு ஒரு போட்டியே நடக்கும். அதுல எப்பவுமே நான்தான் first- அதுவும், விடுதியில் சேர்ந்த புதிதில் தான்... கொஞ்ச நாட்கள்கழிச்சு பாத்தா, விடுதிக்கு வந்த நியூ கம்மர் டாப் ரேங்க் வாங்குவாங்க. இந்த டாப் ரேங்க் அப்பப்போ மாறிட்டே இருக்கும். அந்த கடிதங்களை ஒவ்வொருவருடைய கையெழுத்திலும் படிக்கும்போதே, ஏதோ அவங்ககிட்ட நேரடியாகபேசிய உணர்வு வரும். எனக்கு ஒரு கெட்ட பழக்கம்.... கண்டிப்பாக மூணு பக்கத்துக்கு கம்மியாக கடிதம் எழுத மாட்டேன். ஆனா, என்னுடைய ரெண்டாவது அக்காவுக்கு ஒரு நல்ல பழக்கம்... யார்க்குமே லெட்டர் எழுத மாட்டங்க. அப்படியே எழுதினாலும், அந்த லெட்டர் ரெண்டு வரியை தாண்டாது. நான் ரொம்ப ஆச்சர்யமா எப்படி உன்னால ரெண்டே வரில லெட்டர் எழுத முடியுதுன்னு கேட்டேன். அதுக்கு அவங்க உன்னால எப்படி வழ, வழன்னு எழுத முடியுதுன்னு ஆச்சர்யமாகேட்டாங்க...
கடிதங்களில் தான் எத்தனை வகை.... நேரு மகள் இந்திராவுக்கு எழுதிய வரலாற்றுச்சிறப்பு மிக்க கடிதங்கள்... புதுமைபித்தன் தன் மனைவி கமலாவிற்கு எழுதிய காதல் சொட்டும் கடிதங்கள்... பகத்சிங் சாவை எதிர்நேக்கி இருத்தபோதும், தன் தந்தைக்கு எழுதிய புரட்சி கடிதங்கள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நாம், மின்னஞ்சலில்எழுதும் எந்த கடிதமும் அதனை ஈடு செய்ய முடியாது. மின்னஞ்சல் கடிதங்கள் எல்லாமே உயிரோட்டமில்லா கடிதங்கள்னு சொன்னாலும் மிகையாகாது.

1 comment:

Blog27999 said...

As reported by Stanford Medical, It's in fact the SINGLE reason this country's women get to live 10 years longer and weigh an average of 19 kilos lighter than we do.

(And by the way, it is not about genetics or some secret exercise and absolutely EVERYTHING about "HOW" they are eating.)

P.S, What I said is "HOW", and not "what"...

CLICK this link to uncover if this quick questionnaire can help you find out your real weight loss potential