Saturday, 21 June 2008

மகளிரணி மாநாடு

சமீபத்திய செய்தித்தாள்கள் அனைத்தும் தி.மு.க.வின் மகளிரணி மாநாட்டை பிரதானப்படுத்தி உள்ளன. ஆனால், மாநாட்டுக்கு வந்திருந்த அனைத்துப்பெண்களும், உணர்வு பூர்வமாக பங்கேற்றார்களா என்பதுதான் கேள்வியே.இந்த மாநாடு என்பதே தன் மகள் கனிமொழியை முன்னிறுத்துவதற்காக கலைஞர் நடத்திய அரங்கேற்றம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்த்த பிறகுதான் தெரிகிறது, இது அண்ணன் அழகிரி தன் மகள் கயல்விழிக்காக நடத்திய அரங்கேற்றம் என்பது. கனிமொழியோ, கயல்விழியோ, அது அவர்கள்குடும்ப பிரச்சனை.
காசுக்காகவும், பதவிக்காகவும், கூடிய கூட்டத்தை பார்த்து, பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்ற மாயை உருவாகியுள்ளது. ஆனால், இந்த கூட்டமே, பெண்களின் அவல நிலைக்கு ஒரு முன்னுதாரணம். தன் குடும்பத்தின்பொருளாதார சூழ்நிலையே பெண்களை இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு இழுத்து வருகிறது. இப்படிப்பட்ட கூட்டங்களால்பெண்களின் வாழ்நிலை மாறிவிடாது. ஆனால், கூட்டத்தை கூட்டியவர்களின் வாழ்நிலை கண்டிப்பாக மாறிவிடும்.

No comments: